செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரிமேடை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அங்கு உள்ள எரிமேடை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பொதுமக்கள் அதை உபயோகிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சுடுகாட்டில் உள்ள எரிமேடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.