பராமரிப்பில்லாத இடுகாடு

Update: 2023-12-10 13:47 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு சொந்தமான இடுகாடு ஈசானியதெருவில் அமைந்துள்ளது. இந்த இடுகாடு முறையான பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இடுகாடு விஷப்பூச்சிகளில் கூடாரமாக மாறிவருகிறது. இதன்காரணமாக இறுதிசடங்கு செய்ய செல்பவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடப்பதால் கொசு உற்பத்தியாகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள இடுகாட்டை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்