தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-12-10 11:39 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் அமைந்துள்ள புதிய மேம்பாலத்தின் கீழ் மழை பெய்யும்போது மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்