மூடி கிடக்கும் கழிப்பிடம்

Update: 2023-11-26 10:22 GMT

துடியலூர் அருகே கணுவாய் பஸ் நிலையத்தில் பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது. இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதன் காரணமாக அங்கு செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இதனால் கழிப்பிடம் மூடப்பட்டது. அதன்பிறகு இதுவரை அந்த கழிப்பிடம் பராமரிக்கப்பட்டு திறக்கப்படவில்லை. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்றி தவிக்கும் நிலையை காண முடிகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரித்து திறக்க அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்