கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு, போதை தலைக்கேறியதும் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இதனால் மதுப்பிரியர்கள் தொல்லையால் இரவில் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே பொது இடத்தில் மது அருந்துவதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.