நாய்கள் தொல்லை

Update: 2023-11-19 11:08 GMT

மயிலாடுதுறை மாவட்டம் வழுவூர் பண்டாரவடை உடையார்தெருவில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி தின்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. வாகனங்களில் செல்பவர்களை விரட்டி செல்வதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்