“தினத்தந்தி”க்கு பாராட்டு

Update: 2023-11-05 17:57 GMT

அந்தியூர்-மும்மிரெட்டிபாளையம் இடையே இயக்கப்பட்டு வந்த மினி பஸ் கடந்த 4 மாதங்களாக இயக்கப்படவில்லை. இதை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி “தினத்தந்தி” புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 4 மாதங்களுக்கு பிறகு மினி பஸ் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்தி நாளிதழுக்கும், பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் ெபாதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்