கொசு தொல்லை

Update: 2023-11-05 10:21 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூர் ஊராட்சி பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், கொசு கடியினால் குழந்தைகள், முதியவர்களுக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்