ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-10-29 16:46 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்