சுகாதார வளாகம் கட்ட கோரிக்கை

Update: 2023-10-29 14:34 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி கூட்டு ரோட்டில் இருந்து வேப்பனப்பள்ளி செல்வதற்காகவும், ஓசூர், பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு செல்வதற்காகவும் தினமும் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் நிற்கிறார்கள். அந்த பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் இயற்கை உபாதைகள் கழிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு பகுதியில் சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்