பஸ் நிலையம் பராமரிக்கப்படுமா?

Update: 2023-10-22 15:45 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தற்போது பஸ் நிலையம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. குறிப்பாக பஸ் நிலையத்தில் ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடத்தில் திறந்த வெளியில் பலரும் சிறுநீர் கழித்து செல்வதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பஸ் நிலையத்திற்குள் வரும் இடத்திலும் சாலைகள் சேதமடைந்துள்ளன. எனவே பஸ் நிலையத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்