பள்ளத்தால் சிரமம்

Update: 2023-10-22 14:30 GMT

கோபிசெட்டிபாளையம் கலிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட அவ்வையார்பாளையம் கிராமத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் தட்டு தடுமாறி விழுந்து படுகாயம் அடைந்து சிரமப்பட்டு வருகின்றனர். எனவே விபத்து ஏற்படுவதை தவிர்க்க பள்ளத்தை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்