அடிப்படை வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2023-10-15 17:17 GMT

தர்மபுரி மாவட்டம் ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அடிப்படை வசதி இல்லை. இங்குள்ள பொது சுகாதார வளாகம் எப்போதும் மூடியே உள்ளது. மழைக்காலங்களில் கோவில் வளாகம் முழுவதும் சேறும், சகதியுமாக சுகாதாரமற்று காணப்படுகிறது. மேலும் கோவில் அருகே உள்ள மின்விளக்கு பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த கோவிலில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுப்பார்களா?

-துரை, பாலக்கோடு.

மேலும் செய்திகள்