விருதுநகர் நகரில் உள்ள மேலத்தெரு பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் இரவு நேரத்தில் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஆதலால் மேற்கண்ட பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.