பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர்

Update: 2023-10-15 13:11 GMT

பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர்

திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அம்மாபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழல் குடை உள்ளது. இந்த நிழல் குடையில் பயணியர் அமரும் இருக்கைகள் உடைந்து சிதலமாகியும், சுகாதார சீர்கேடு விளைவிக்கும் விதமாக விளம்பர துண்டு பிரசுரங்கள் ஒட்டி அசுத்தமாகவும், தற்போது பெய்துவரும் மழைநீர் உள்ளே தேங்கி நிற்பதாலும் கொசு உற்பத்தி ஏற்பட்டு நோய்த்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இங்கு வரும் பயணியர்கள் அமரமுடியாமல் முகம் சுழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இந்த நிழற்குட்டையை சீர்படுத்தி தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

தெய்வராஜ்,அம்மாபாளையம்.

9442372611

மேலும் செய்திகள்