ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2023-10-08 15:24 GMT

அந்தியூர் மாத்தூர் கிராமத்தில் உள்ள குட்டையில் இருந்து மழை காலத்தில் உபரிநீர் செல்லும் பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் குட்டையில் இருந்து வரும் மழைநீர் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து தேங்கி நிற்கின்றன. இதன் காரணமாக விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி குட்டையில் இருந்து உபரிநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்