போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள்

Update: 2023-10-08 12:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தேரழந்தூர்-கோமல் இடையிலான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் சாலை நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனை அறியாமல் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் சுற்றிதிரியும் கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

படம் இல்லை

பொதுமக்கள்

மேலும் செய்திகள்