சாலையில் சுற்றித்திரியும் நாய்கள்

Update: 2023-10-08 12:15 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முக்கிய கடைவீதிகள், சாலைகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இவை வீடுகளில் வளர்க்கப்படும் கோழி, ஆடுகளை கடித்து கொன்றுவிடுகின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்