புகை மூட்டத்தால் விபத்து அபாயம்

Update: 2023-10-08 11:46 GMT

 புகை மூட்டத்தால் விபத்து அபாயம்

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் வலசப்பாளையம் பிரிவு பனங்காடு அருகே சாலையோரம் பெருமாநல்லூர் ஊராட்சி மூலம் குப்பைகளை கொட்டி வருகிறார்கள். அந்த குப்பையில் தீ வைத்து எரிந்து கொண்டிருக்கிறது. ரோட்டில் எதிேர வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு புகை மூட்டமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு எடுத்துச்சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை.மெயின் ரோட்டில் புகை மூட்டமாக இருப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும், மூச்சுத்திணறல் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைத்து புகை மூட்டத்தில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

பா.குமார்,

பெருமாநல்லூர்

86675 81997

மேலும் செய்திகள்