சுகாதார சீர்கேடு

Update: 2023-10-01 17:12 GMT

ஓமலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேலம்-மேட்டூர் வழித்தட ஓமலூர் பஸ் நிறுத்தத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இந்த பகுதியில் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு தீர்வுகாண வேண்டும். மேலும் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழை காலங்களில் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நிழற்கூடம் அமைத்து தரவேண்டும்.

-முருகன், எம்.செட்டிப்பட்டி, ஓமலூர்.

மேலும் செய்திகள்