பன்றிகள் அட்டகாசம்

Update: 2023-10-01 11:43 GMT

மயிலாடுதுறையை அடுத்த கொள்ளிடம் அம்மன்நகர்,பூஜைநகர்,தோப்புத்தெரு ஆகிய பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாக்கடையில் உருண்டு, புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. மேலும், வீடுகளில் வளர்க்கப்படும் செடிகள், விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்