நாய்கள் தொல்லை

Update: 2023-10-01 11:42 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே திருமுல்லை ஊராட்சி பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. மேலும், சாலையில் செல்லும் வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே, பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்