கொசுத்தொல்லை

Update: 2023-10-01 10:31 GMT

கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதி, விநாயகர் கோவில் வீதி, செந்தமிழ் நகர், மூவர் நகர் ஆகிய பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. அதுவும் இரவில் மின்தடை ஏற்பட்டு விட்டால், கொசுக்கடியில் தப்பிக்கவே முடிவது இல்லை. இதனால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. ஏற்கனவே டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சுகாதார பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட வேண்டும்.

மேலும் செய்திகள்