விஷ ஜந்துகள் நடமாட்டம்

Update: 2023-09-27 11:34 GMT

கோவை மாநகராட்சி 15-வது வார்டு சுப்பிரமணியம்பாளையம் கே.எம்.வி. கார்டன் செல்லும் வழியில் உயர் கோபுர மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் பதுங்கி உள்ளன. இந்த வழியே பள்ளி மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நடந்து சென்று வருகின்றனர். அவர்களை அங்கு நடமாடும் விஷ ஜந்துகள் தாக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள புதர் செடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்