ஓடை தூர்வாரப்படுமா?

Update: 2023-09-24 17:50 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் உபரி நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த ஓடை தற்போது தூர்ந்து போய் கிடக்கிறது. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளது. இதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெள்ளியங்கால் ஓடை வழியாக திறந்து விடும் பட்சத்தில் அவை சீராக செல்லமுடியாமல் கிராம புறங்களுக்குள் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓடையை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்