அகற்ற வேண்டிய ஆக்கிரமிப்புகள்

Update: 2023-09-24 16:52 GMT

 சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட விநாயகபுரத்தில் ஆத்தூர்-சேலம் செல்லும் உட்புற சர்வீஸ் சாலையில் வடபுறம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி மற்றும் வாழப்பாடி பகுதியிலிருந்து பள்ளி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இவ்விடுதிக்கு முன்புறம் உள்ள பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து கடை நடத்தி வருகிறார்கள். எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், நரசிங்கபுரம், ஆத்தூர்.

மேலும் செய்திகள்