பாலம் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2023-09-24 15:03 GMT

ராமநாதபுரம் நகரில் ரெயில் நிலையம் அருகில் உள்ள திருப்புல்லாணி செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால வேலைகள் கடந்த ஐந்து வருடங்களாக இன்னும் முடிவடையாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இ.சி.ஆர். ரோடு வழியாக சுற்றி செல்லவேண்டி உள்ளது. எனவே பால வேலைகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்