சேதமடைந்த நூலக கட்டிடம்

Update: 2023-09-20 17:38 GMT
ரிஷிவந்தியம் தொகுதி வாணாபுரம் பகண்டை கூட்டுரோடு பகுதியில் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலக கட்டிடம் பலத்த சேதடைந்து, சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகிறது. மேலும் மழைக்காலங்களில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் கசிவதால், புத்தகங்கள் நனைந்து வீணாகி வருகிறது. எனவே கிளை நூலக கட்டிடத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்