விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருந்து மதுரைக்கு செல்ல போதுமான பஸ்வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆதலால் மேற்கண்ட வழித்தடத்தில் போதுமான பஸ் இயக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?