விருதுநகர் மாவட்டத்தில் எண்ணற்ற நீர்நிலைகளில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுவதுடன் தண்ணீரும் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. ஆதலால் நீர்நிலையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.