மயிலாடுதுறை மாவட்டம் பட்டமங்கலம் ஊராட்சியில் அக்களூர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கொசுகடியினால் அந்த பகுதி மக்கள் தொற்று நோய் பரவலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.