விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள சில கண்மாய்களில் கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் போதிய அளவு நீரை தேக்கி வைக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.