அரசு பள்ளியில் குரங்குகள் அட்டகாசம்

Update: 2022-09-08 10:08 GMT

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் ஏராளமான குரங்குகள் வந்து, கடந்த ஒரு வாரமாக மரக்கிளைகளில் ஏறி அட்டகாசம் செய்து வருகின்றன. மாணவர்களின் சைக்கிள் சீட்டுகளை கிழிப்பது, மாணவர்களை பயமுறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாணவர்கள் மிகவும் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட ேவண்டும்.

-பொதுமக்கள், கணியம்பாடி.

மேலும் செய்திகள்