தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-09-03 19:00 GMT

தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும்

பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதியில் சேதமடைந்து பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அறையில் சென்று பாலூட்டுவதற்கு தாய்மார்கள் தயங்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆனந்தன், பல்லடம்.

மேலும் செய்திகள்