அரக்கோணம் தாலுகா புளியமங்கலம், மோசூர் ரெயில் நிலையங்களை ஒட்டி ஏரிகள் உள்ளன. அந்த ஏரிகளை தூர்வாரி மதகுகளை சீர் செய்து, ஏரிக்கரையில் பனைமரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். ஏரிகளை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்புகளால் ஏரிகளின் பரப்பளவு சுருங்கி வருகிறது. அந்த ஏரிகள் ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அதிகாரிகள் ஏரிகளை தூர்வார வேண்டும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
-குமார், அரக்கோணம்.