வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பஸ் நிறுத்தத்தில் தற்போது புதிய நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமுக விரோதிகள் எந்நேரமும் குடித்துவிட்டு போதையில் படுத்துத் தூங்குகின்றனர். இதனால் அங்கு பயணிகள், பெண்கள், பள்ளி சிறுமிகள் நிற்க அச்சப்படுகின்றனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபடும் போலீசார் நிழற்குடையை கண்காணிக்க வேண்டும்.
-ராஜா, வேலூர்.