நாய்கள் தொல்லை

Update: 2023-09-24 10:46 GMT

கலசபாக்கம் பஜார் வீதியில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. வட்டாட்சியர் அலுவலகத்துக்கு தினமும் பலர் வந்து செல்கின்றனர். அவர்களை நாய்கள் கடிக்க பாய்கின்றன. நடுபஜாரில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் மக்கள் அச்சப்படுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் பின்தொடர்ந்து விரட்டிச் சென்று ஓடி அச்சுறுத்துகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகளை நாய்கள் பின் தொடர்ந்து வருகின்றன. இதேபோல் மேல்தெருவில் இரவில் நாய்கள் குரைப்பதால் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கிராம நிர்வாகம் உடனடியாக நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத்கண்ணா, கலசபாக்கம்.

மேலும் செய்திகள்