நாய்களால் அச்சம்

Update: 2023-05-14 15:44 GMT

நாய்களால் அச்சம்

திருப்பூர் எம்.எஸ்.நகர் கொங்கு மெயின் ரோடு கரூர் வைசியா பேங்க் ஏ.டி.எம்-க்குள் தெருநாய்கள் அடிக்கடி வந்து படுத்துக்கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க, பணம் அனுப்ப செல்லும் வாடிக்கையாளர்கள் நாய் படுத்து கிடப்பதால் உள்ளே செல்ல அச்சம் அடைகின்றனர். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் மிகுந்த அச்சம் அடைகிறார்கள். நாய்களை விரட்ட அக்கம்பக்கத்தினர் உதவியை நாடும் நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

ரஞ்சித்குமார், திருப்பூர். 

மேலும் செய்திகள்