காட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம்-ஓடை பிள்ளையார் கோவில் இடையே, ஒரு தனியார் வங்கி அருகில் பல ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் பட்டுப்போன மரம் ஒன்று நிற்கிறது. அந்த மரம் கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் அச்சத்தோடு சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள அந்த மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாஸ்கரன், காந்திநகர். காட்பாடி