பண்ருட்டி தாலுகா அலுவலகத்திற்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகமானது முறையான பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் அந்த இடம் விஷப்பூச்சிகளின் புகலிடமாக மாறியுள்ளது. விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சுகாதார வளாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.