மதுரை நகர் தெற்குவாசல் மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. மேலும் சில இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டி அபாயமாக காட்சியளிக்கிறது. இதனால் விபத்து எற்படும் அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணிக்கின்றனர். வாகன ஓட்டிகள் நலன் கருதி அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக சேதமடைந்த பாலத்த்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?