கடலூர் கம்மியம்பேட்டையில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் அதிகளவில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளன. இதனால் போதுமான அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. மேலும் இதனால் தண்ணீரில் துர்நாற்றமும் வீசி வருவதால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து ஆகாயத்தாமரைகளை அகற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.