மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள பொய்கைகரைபட்டி பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கிருந்து பிற இடங்களுக்கு பஸ்சில் செல்லும் பயணிகள் குறிப்பாக பெண்கள் மற்றும் முதியோர்கள் பஸ் நிறுத்தத்தில் வெயில் மற்றும் மழையில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமமடைகின்றனர். பயணிகள் நலன் கருதி அதிகாரிகள் இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.