கடமலைக்குண்டு பாலூத்து ஓடையை ஆக்கிரமித்து நாணல் புற்கள், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும் ஓடையில் கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே ஓடையை ஆக்கிரமித்து வளர்ந்துள்ள நாணல் புற்கள், முட்செடிகளை உடனே அகற்ற வேண்டும். கொசுப்புழுக்களை அழிக்க மருந்து தெளிக்க வேண்டும்.