சமுதாயநலக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2023-04-09 19:24 GMT

சமுதாயநலக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

ஊத்துக்குளி தாலுகா 16. வேலம்பாளையம் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த சமுதாயநலக்கூடம் கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் இல்ல சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில் சிரமம் அடைந்து வருகிறார்கள். பொதுமக்கள் நலன் கருதி இந்த சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர 16 வேலம்பாளையம் ஊராட்சி நடவடிக்கை எடுக்குமா?,

-முருகன், ஊத்துக்குளி.

மேலும் செய்திகள்