திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் இருந்து ஆற்காடு செல்லும் சாலையில் கொங்கராம்பட்டு கிராமத்தில் ஒரு புளிய மரம் பட்டுப்போய் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீசினால் வீடு, வீதியில் விழுந்தால் உயிர் சேதம் ஏற்படலாம். பட்டுப்போன மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜா, கொங்கராம்பட்டு.