பள்ளியில் சமூக விரோத செயல்

Update: 2023-02-08 16:20 GMT

வந்தவாசி தாலுகா கடம்பை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளியில் இரவில் ஒருசிலர் சமூக விரோத செயலில் ஈடுபடுகின்றனர். பள்ளி கட்டிடத்துக்கு வெளியே உள்ள குழாய் வழியாக மேல் தளத்துக்கு ஏறி அங்கு மது குடிக்கின்றனர். கழிவறை கதவு, குழாய்களை சேதப்படுகின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். பள்ளியை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். இரவில் பள்ளியில் சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-என்.ஆர்.தமிழரசு, கடம்பை. 

மேலும் செய்திகள்