அணைக்கட்டு தாலுகா அகரம் உயர்நிலைப்பள்ளியின் கிழக்குப் பக்க சுற்றுச்சுவர் பகுதியில் கேட் இல்லாமல் திறந்த வழியாக உள்ளது. இதனால், விடுமுறை நாட்களில் இரவில் சமூக விரோதிகள் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பள்ளி நிர்வாகம் சுற்றுச்சுவர் கட்டி பள்ளியை பாதுகாக்க வேண்டும்.
-லட்சுமணன், அணைக்கட்டு.