100 நாள் வேலை வழங்கப்படுமா?

Update: 2022-08-16 12:59 GMT

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் இந்த ஆண்டு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் இதுவரை வேலை வழங்கவில்லை. தற்போது 8-வது மாதம் நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இனியும் வழங்கவில்லை என்றால் இந்த ஆண்டு முழுவதும் 100 நாள் வேலை வழங்க வாய்ப்பு மிகவும் குறைவு. இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஏழை-எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்