100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் அவதி

Update: 2022-09-04 13:35 GMT

பெரம்பலூர் ஒன்றியம் , செங்குணம் ஊராட்சியில் செங்குணம், அருமடல், பாலாம்பாடி, சறுக்குபாலம் பகுதிகளை சேர்ந்த 1,474 குடுங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் பகுதி வாரியாக குறிப்பிட்ட நபர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழகிழமை முதல் அடுத்த புதன்கிழமை வரை 100 நாட்கள் திட்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. 100 நாட்கள் திட்ட வேலையில் ஈடுபடும் நபர்களை நாள்தோறும் காலை 6 மணிக்கு செங்குணத்தில் பெரிய ஏரிக்கரைக்கும், அருமடல் சறுக்குபால பகுதிக்கு இடையில் உள்ள வாட்டர் டேங்கிற்கும் வரச்சொல்லி வருகை பதிவிற்காக பணிதள பொறுப்பாளர்களால் எம்.எம்.எஸ் போட்டோ எடுக்கப்படுகிறது. இதனால் காலையில் சமைப்பது, தண்ணீர் எடுப்பது , குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைப்பது, இயற்கை உபாதைகளை கழிப்பது உள்ளிட்ட சிரமங்கள் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. எனவே பழைய வழக்கப்படி வேலை நடைப்பெறும் இடத்தில் எம்.எம்.எஸ். போட்டோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்